6 கி.மீ.தூர சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி மிட் டவுன்   அரிமா சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கான  6 கி.மீ. தூர சைக்கிள் போட்டி மற்றும் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது. போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி, போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் மிட் டவுன் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்